அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு வலுவான அதிமுகவே தங்களின் தற்போதைய தேவை என்று வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு முன்பாக, தமக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வேண்டாம் என்றும், ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமாவது இருக்க அனுமதிக்குமாறும் எடப்பாடி பழனிசாமியிடம் கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘முடியவே முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய சி.வி.சண்முகம், தற்போது அனைவரையும் ஒன்றிணையக் கோரி எடப்பாடி அறிக்கை வெளியிடுவது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வது போன்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசியபோது, அதனைத் தடுத்துக் கெடுத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற கூட்டணிக் கட்சிகளை எடப்பாடி துளியும் மதிக்கவில்லை என்றும், அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிய இந்தத் தவறான அணுகுமுறையால்தான் அதிமுக தொடர்ந்து தனது வாக்கு சதவீதத்தை இழந்து, தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…
பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான…
தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்த…
ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர், மாவட்டத்தின்…
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள்…
மறைமலைநகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் தங்களுக்கு…