அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விராலிமலை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சென்னையில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மீண்டும் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சந்திப்பில், அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த சில முக்கிய எம்எல்ஏக்களும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரே அணியில் செயல்பட்ட சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் இந்த திடீர் சந்திப்பு, கட்சிக்குள் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தற்போதைய சூழலில் சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக இடைத்தேர்தலை சந்திக்கும் மனநிலையில் இல்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் தனது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து அவர் தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமான, அதே சமயம் சாதுரியமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. சி.வி.சண்முகம் தன்னை நேரில் சந்திக்காத வரை அவருக்கு கட்சியில் எந்த புதிய பொறுப்பும் வழங்க முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்தாலும், தற்போதைக்கு அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை என்றே கூறப்படுகிறது. சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு நீக்கினால், அவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பித்து தவெக போன்ற மாற்று சக்திகளுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்பதால், அதிருப்தியாளர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் தலைமை எச்சரிக்கையாக உள்ளது.
இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல், அதிருப்தி எம்எல்ஏக்களின் அடுத்தகட்ட முடிவு மற்றும் தவெக-வின் அரசியல் எழுச்சி ஆகியவை குறித்து வேலுமணியும், சண்முகமும் விரிவாக விவாதித்துள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஏற்கனவே சில தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், அதிருப்தி அணியைச் சேர்ந்த மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த அடுத்தடுத்த திருப்பங்களால், தமிழகம் விரைவில் பல தொகுதிகளில் ஒரு மினி பொதுத்தேர்தல் போன்ற இடைத்தேர்தலைச் சந்திக்க நேரிடும் என்றும், அதிமுக மீண்டும் ஒருமுறை உடையும் அபாயத்தை நோக்கி நகர்வதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…