தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டின் ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரையிலான அடுத்த 6 மாத காலத்திற்கு, சென்னை மாநகரைச் சேர்ந்த முதியவர்கள் பயன்படுத்துவதற்காக, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கும் பணிக்கான தேதியை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த இலவச பயண டோக்கன்கள் விநியோகம் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகள், வரும் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை சென்னை முழுவதும் உள்ள 39 குறிப்பிட்ட மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் எவ்வித விடுமுறையுமின்றி அனைத்து நாட்களிலும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்காலகட்டத்தில் வாங்கத் தவறுபவர்கள், ஆகஸ்ட் 1, 2026 முதல் டிசம்பர் 20, 2026 வரை வழக்கம்போல அந்தந்த பணிமனை அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் மற்றும் வேலை நேரங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய புதிய அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா பயண டோக்கன்களைப் பெறுவதற்குத் தங்களின் இருப்பிடச் சான்றாகக் குடும்ப அட்டை, வயதுச் சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது கல்விச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த டோக்கன்களை அடையாறு, திருவான்மியூர், மந்தவெளி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட 25 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் முதியவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…
தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…
1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…