நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் இருந்து உதயப்பூருக்கு சுற்றுலா வந்த சுனில், அல்பேஷ், ரித்விக் மற்றும் சுமித் ஆகிய நான்கு நண்பர்களில், இரண்டு பேர் தீன்தயாள் பூங்காவில் இருந்து மாணிக்யலால் வர்மா பூங்காவிற்கு ஜிப் லைன் மூலம் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. பொதுவாக 45 வினாடிகளில் கடக்கக்கூடிய இந்த 630 மீட்டர் தூரப் பயணத்தின் நடுவே, திடீரென வீசிய பலத்த காற்றினால் ஜிப் லைன் பாதியிலேயே நின்று பயங்கரமாக ஆடத் தொடங்கியது.

திடீரென காற்றில் தொங்கியபடி சிக்கிக்கொண்ட அந்த இரு நண்பர்களும் பயத்தில் அலறி, உதவி கேட்டு சத்தமிட்டனர். இந்த திகிலூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோ வைரலானதை அடுத்து, இந்த விபத்து குறித்து உள்ளூர் நிர்வாகமும் உடனடியாக விசாரணையில் இறங்கியது.

சம்பவம் நடந்த உடனே அங்கு தயாராக இருந்த மீட்புக் குழுவினர் மிகவும் துரிதமாகச் செயல்பட்டனர். வெறும் இரண்டரை முதல் மூன்று நிமிடங்களுக்குள் அந்தரத்தில் தவித்த இருவரையும் பத்திரமாக மீட்டு, மீண்டும் தீன்தயாள் பூங்கா பகுதிக்குக் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஜிப் லைன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். உதயப்பூரில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

16 minutes ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

16 minutes ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

17 minutes ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

30 minutes ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

44 minutes ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

45 minutes ago