டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், இந்தியா உட்பட 60 வணிகக் கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10 முதல் 12.5 சதவீதம் வரை புதிய சுங்க வரிகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்க அரசியலமைப்புக்கும் சட்டங்களுக்கும் புறம்பானது எனக் கூறி, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட முந்தைய இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக, 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் இந்த புதிய வரிகள் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதிபர் ட்ரம்ப்பின் இந்த வரிகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநிலங்கள் தங்களது வழக்கில் வலியுறுத்தியுள்ளன. “உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவைச் சந்தித்த பிறகும், நிர்வாகம் புதிய வரிகள் மூலம் சாமானிய குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் சுமையைச் சுமத்த முயல்கிறது. தன்னிச்சையாக எந்தவொரு நாட்டின் மீதும் வரிகளை விதிக்க அதிபருக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது” என்று நியூயார்க் தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய சுங்க வரிகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என மாநில நிர்வாகங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது குறித்துப் பேசிய நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், ட்ரம்பின் இந்த சட்டவிரோத வரிகளால் மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து, கடினமாக உழைக்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் கூறுகையில், “அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதகமாக உள்ள நியாயமற்ற கொள்கைகள் மற்றும் கட்டாய உழைப்பு மூலம் தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நடைமுறைகளைத் தடுக்கவே இந்தச் சட்டப்பூர்வ அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது; பிரிவு 301 சுங்க வரிகள் சட்டரீதியாகச் செல்லுபடியாகும் மிக முக்கியமான கருவியாகும்” என்று விளக்கமளித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…
ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…
தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி, திமுக நிர்வாகி உதயநிதி இன்று காலை…
திருச்சியில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் செங்கிப்பட்டி…
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து போலீஸ்…