தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப் பேசினார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள் பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட உளவுத்துறை அதற்கான வீடியோ ஆதாரங்களை சென்னை மேலிடத்திற்கு அனுப்பியது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்றும், சட்டரீதியான நடவடிக்கைகளை மட்டுமே பின்பற்றுமாறும் முதல்வர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உதயநிதியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், தங்களுக்கு அவரை ரிமாண்ட் செய்யும் நோக்கம் எதுவுமில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உதயநிதியை அன்றைய தினமே காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இருப்பினும், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதேவேளையில் திமுக மூத்த வழக்கறிஞர்கள் இக்கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாதாரண அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்யக்கூடிய ஒரு பேச்சுக்கு, கடுமையான 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது உதயநிதியை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உதயநிதியின் பேச்சு நாகரிகமற்றதாக அமைந்திருந்தாலும், தவெக அரசு கையாண்டுள்ள இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…
தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி, திமுக நிர்வாகி உதயநிதி இன்று காலை…
திருச்சியில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் செங்கிப்பட்டி…
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து போலீஸ்…
பெங்களூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூரைச் சேர்ந்த ரோஹித் என்பவருக்கும், அவரது சொந்த ஊரில் கர்ப்பிணியாக இருந்த…