Connect with us
Thosam

ASTROLOGY

அணுஅணுவாக ஆட்டிப் படைக்கும் பிரம்மஹத்தி தோஷம்.. பிடிச்சா அவ்வளவு தான்.. இந்த பாவத்தை மட்டும் செய்யாதீங்க..

தினமும் நம்மை அறியாமலேயே நாம் பல பாவங்களைச் செய்து வருகிறோம். தெரிந்து செய்த பாவங்களுக்கு விமோச்சனம் கிடையாது. ஆனால் தெரியாமல் செய்கிற பல பாவங்களுக்கு கண்டிப்பாக விமோச்சனம் உண்டு. இத்தகைய பாவங்களை தகுந்த பரிகாரங்கள் மற்றும் புண்ணியங்கள் செய்து அதிலிருந்து விடுபடலாம். ஆனால் அவ்வாறு நாம் பாவங்களைச் செய்யும் போது நம்மை சில தோஷங்கள் பிடித்துக் கொள்கின்றன.

திடீரென நம் வாழ்வில் புயல் அடிக்கும். அதுவரை குடும்பத்தில் நிலவிவந்த மகிழ்ச்சி ஒவ்வொன்றாய் மாறி வாழ்க்கையே நிலைகுலைந்து போகும்.  இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் தோஷங்களில் மிகவும் கொடூரமானது பிரம்மஹத்தி தோஷமாகும்.

   

#image_title

இந்த தோஷமானது எப்படி நம்மைப் பிடிக்கும் என்றால் ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள், பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குக் கொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல். பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது, குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது, குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது,சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்) போன்ற பாவங்கள் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க காரணமாக அமைந்து விடுகிறது.

இந்த மாதிரி தங்கத்தை வாங்கிப் பாருங்க.. மவுசே குறையாம அப்படியே அதிக லாபத்துக்கு விற்கலாம்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும் தெரியுமா?
வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும், தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும், மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும், தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும், திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது, குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம் போன்ற கெடுதல்களை விளைவிக்கும்.

#image_title

இதற்குப் பரிகாரமே இல்லையா என்றால் அதற்கும் ஒரு வழி உள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல் போன்றவற்றைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

author avatar
Continue Reading

More in ASTROLOGY

To Top