நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த தண்டபாணி, மகள் நந்தினி (21). திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் தூரத்து சொந்தமான இராசிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய் (26) என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அஜய், நந்தினி வீட்டில் பெண் கேட்டு பார்த்து உள்ளார். பெற்றோர்கள் மறுத்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று நந்தினி கல்லூரிக்கு சென்றுள்ளார். போகும் வழியில் அஜய்க்கு கால் செய்து என்னை கூட்டிக்கொண்டு போய்விடு இல்லையெனில் வேற யாருக்காவது என்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று அழுதுள்ளார்.
அதனால் அஜய் சில உறவினர்களை கூட்டிக்கொண்டு வாடக காரில் நந்தினியின் கல்லூரிக்கு அருகே வந்துள்ளார். நந்தினியின் தந்தையும் நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். பஸ்ஸிலிருந்து இறங்கிய நந்தினி, அஜய் கூட்டிக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் தந்தை தண்டபாணி காரை வழிமறித்து கூச்சலிட்டு உள்ளார். பின்பு உறவினர்களுக்கு கால் செய்து வரவழைத்துள்ளார். இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி கண்டிப்பாக நம்மை பிரித்து விடுவார்கள் என்று அச்சத்தில் இருந்தன. நந்தினியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள் இனி நம்மளோட பேசமாட்டார், கல்லூரிக்கும் அனுப்ப மாட்டார்கள் என்று அஜய் பயந்தார்.
அஜய் தயாராக வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டி விட்டு மோதிரத்தையும் நந்தினிக்கு அணிவித்துள்ளார். இதைப் பார்த்த நந்தினி உறவினர்கள் காரை அடித்து நொறுக்கி உள்ளனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவருமே மேஜர் என்பதால் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…
புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள 'தகாஸ் வேலி' என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி…
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள்…