Connect with us

CINEMA

“அழகு தான் அவளுக்கு முக்கியம்; அதனால் தான் உயிரே போச்சு”.. மனம் திறந்து பேசிய போனி கபூர்..!!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் முன்னணி நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஹோட்டல் குளியல் அறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த நிலையில் கிடந்தார்.

உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியது. ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் எதிர்பாராதவிதமாக குளியல் அறை தொட்டியில் விழுந்து இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் போனி கபூர் அளித்த பேட்டியில், எனது மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது தற்செயலாக நடந்த மரணம்.

   

திரையில் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பார். உப்பு இல்லாத உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் பலமுறை சோர்வடைந்து ஸ்ரீதேவிக்கு தலை சுற்றிலும் ஏற்பட்டு கீழே விழுந்து இருக்கிறார். ரத்த அழுத்தம் குறைவு பிரச்சினை இருப்பது குறித்து டாக்டர்கள் எச்சரித்தும் அதை ஒரு பெரிய விஷயமாகவே ஸ்ரீதேவி எடுத்துக் கொள்ளவில்லை. அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து தான் இறந்தார். அந்த நேரத்தில் துபாய் போலீசார் என்னை ஒருநாள் முழுவதும் விசாரித்தார்கள்.

எனக்கு உண்மை கண்டறியும் சோதனையும் செய்தார்கள். அதன் பிறகு தான் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை அவ்வாறே வந்தது. முன்னதாக நடிகர் நாகார்ஜுனா என்னை சந்தித்தபோது ஒரு விஷயத்தை கூறினார். ஒருமுறை நாகர்ஜுனாவோடு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்த போது கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் படபிடிப்பில் சுயநினைவை இழந்து ஸ்ரீதேவி கீழே விழுந்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார் என போனி கபூர் தெரிவித்தார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top