CINEMA
அண்ணன் செல்வராகவனை போல தனுஷுக்கும் 2-வது திருமணம்.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட பயில்வான்..!!
சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவும் முன்னணி நடிகரான தனுஷும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்கின்றனர். அதன் பிறகும் பிரிந்து இருந்தாலும் நானும் எனது குடும்பத்தினரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்.
விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என ஐஸ்வர்யா கூறியது தனுஷின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இருவரும் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்த ஐஸ்வர்யா திருமணமாகி தனுஷின் தாய், தந்தை, நாத்தனார் என யாரையும் மதிக்கவில்லை.
அவரது போக்கிலேயே விட்டுவிட்டார்கள். அடிக்கடி அப்பாவை பார்க்க செல்கிறேன் என ஐஸ்வர்யா சென்று விடுவார். தனுஷ் போயஸ் கார்டனிலேயே ஒரு பங்களாவை கட்ட ஆரம்பித்தார். முதலில் ரஜினிகாந்த் அந்த வேலைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பிறகு முழு வேலையும் தனுஷ் தான் கவனித்து பங்களாவை கட்டி முடித்தார். அவர் தனது மாமனாரிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்தபோது தனுஷின் குடும்பத்தினர் தவறாமல் கலந்து கொண்டனர்.
ஆனால் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷின் அண்ணன் செல்வராகவன் சோனியா அகர்வாலை முதலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியுடன் செல்வ ராகவன் நன்றாக வாழ்கிறார்.
இதேபோல தனுஷும் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்கிறார். இதனால் கஸ்தூரிராஜா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். மேலும் தனுஷ் ரஜினிகாந்தின் சொத்தில் பங்கு கேட்பதாக கூறுவது சத்தியமான பொய். தனுஷ் தனது சொந்த முயற்சியில் தான் முன்னேறினார். தற்போது சினிமாவிலும் அதிக சம்பளம் வாங்கி சம்பாதித்து வைத்திருக்கிறார். அப்படி இருக்க அவர் ரஜினிகாந்திடம் சொத்தில் பங்கு கேட்கவில்லை என்பது உறுதி என பயில்வான் கூறியுள்ளார்.