Connect with us

CINEMA

கமலால் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் பிரச்சனைக்கு கிடைக்கப் போகும் தீர்வு.. ஒன்று கூடும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!

ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்து மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினம் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

   

அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருக்கின்றார். இவரின் என்ட்ரி டீசர் நேற்று வெளியாகி வைரலாகி வந்தது. இந்த திரைப்படத்திற்காக டெல்லி சென்று இருந்த கமலஹாசன் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு கமலஹாசன் பதில் அளித்தார்.

இந்நிலையில் கமலஹாசன் சென்னை திரும்பியதற்கான காரணம் வெளியாக்கியுள்ளது. கமலஹாசன் ஹீரோவாக நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி இருந்தார். இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத காரணத்தினால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனால் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டார் லிங்குசாமி. இது குறித்து பல பேட்டிகளில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றார் லிங்குசாமி. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “கமலஹாசனை வைத்து நாங்கள் இயக்கிய உத்தம வில்லன் திரைப்படம் தோல்வியடைந்தது.

அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக 30 கோடியில் மற்றொரு திரைப்படத்தை நடித்து தருவதாக கமலஹாசன் எழுத்துப்பூர்வமாக அறிவித்து இருந்தார். 9 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அவர் கால்ஷீட் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி கமலிடம் கால்ஷீட் பெற்று கொடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

எனவே இது தொடர்பான பஞ்சாயத்து நாளை நடைபெற உள்ளது. அதற்காக தான் கமலஹாசன் சென்னை திரும்பி இருக்கிறார். மேலும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கமலஹாசன் நேரில் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக அவரது அண்ணன் ஷாருக்கான் தான் கமலஹாசன் பிரச்சனை சம்பந்தமான அனைத்திற்கும் சென்று வருவார். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது தம்பி மகேந்திரன் இந்த பிரச்சனையை கையாளுவார் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் நாளை பல பிரபலங்கள் இந்த பஞ்சாயத்துக்கு கலந்து கொள்ள இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top