நடிகர் விக்ரம் தந்தை வினோத் ராஜ் அவர்களின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் 1990 இல் கால் பதித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தேசிய விருது, தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது, விகடன் விருது என பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர் ஆகவும், டப்பிங் கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.
சினிமாவில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக நடிப்பில் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். ரசிகர்களுடன் சகஜமாக பழகக்கூடிய இவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்வார். 1990 வெளிவந்த ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் இவர் பயணம் தொடங்கி தற்பொழுது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்து நிற்கிறது.
இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
நடிகர் விக்ரம் சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகனும் உள்ளனர். நடிகர் விக்ரம் மகன் ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். நடிகர் விக்ரமின் தந்தையை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் விக்ரமின் தந்தையும் ஒரு நடிகர் தான்.
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் ஒரு புகழ்பெற்ற நடிகர். இவர் நடிகர் மட்டும் இன்றி ஒரு தயாரிப்பாளரும் ஆவார். கில்லி, திருப்பாச்சி போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் இவர் மரணம் அடைந்தார். தற்பொழுது விக்ரமின் தந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக……
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…