“காதல் திருமணம் செய்த தங்கை மகள்… துப்பாக்கியோடு பாய்ந்த மாமா”… போலீசார் வர்றதை பார்த்து காட்டுக்குள் செய்த பகீர் காரியம்….!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரன் – சித்ரா தம்பதியினர். இவர்களது மூத்த மகளான 23 வயதுடைய அஞ்சலி, சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அப்போது, அதே கல்லூரியில் பயின்ற தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவருடன் அஞ்சலிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது. பின்னர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இவர்களுக்கு, சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மனம் மாறிய அஞ்சலியின் தாய் சித்ரா, தன் மகளையும் குழந்தையையும் ஏலகிரி மலையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மகள் மற்றும் குழந்தையுடன் சித்ரா ஊருக்கு வந்ததைக் கண்ட அவரது அண்ணன் கிருஷ்ணன் கடும் ஆத்திரமடைந்துள்ளார். “எங்களுக்குத் தெரியாமல், எங்களைக் கேட்காமல் எதற்காக உன் மகளை இங்கு அழைத்து வந்தாய்? காதல் திருமணம் செய்தவர்களுக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று கூறி சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அஞ்சலியைத் தாக்கியுள்ளார். இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற மாமா கிருஷ்ணன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சலியைச் சுட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் உடனடியாக கிருஷ்ணனைத் தடுத்து, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அஞ்சலி ஏலகிரி மலை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதை அறிந்த கிருஷ்ணன், அத்தாட்சியை மறைப்பதற்காகத் துப்பாக்கியை உடைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் வீசியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை காவல் ஆய்வாளர் பாரதி, கிருஷ்ணனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார். மேலும், காட்டுப் பகுதியில் உடைத்துப் போடப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காதல் திருமணம் செய்த தங்கை மகளையே தாய்மாமன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago