நெல்லை மாவட்டத்தில் “ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டு” என்று சொல்லும் அளவுக்கு ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய அரியதொரு மருத்துவ அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, வெவ்வேறு வயதுடைய மூன்று உடன்பிறப்புகள், ஒரே மகப்பேறு மருத்துவமனையில், இயற்கை முறையில் ஒரே தேதியில் (ஜூன் 10) பிறந்து அரிய சாதனை படைத்துள்ளனர். இந்த அபூர்வ நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கற்பனைக்கு எட்டாத இந்த அரிய நிகழ்வை ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘பியூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவித்துள்ளன. ஒரே தேதியில் மூன்று குழந்தைகள் பிறப்பதே அரிதான ஒன்று என்ற நிலையில், இது எவ்வித திட்டமிடலும் இன்றி இயற்கை முறையில் நிகழ்ந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த அதிசயத்தின் உச்சக்கட்ட “ட்விஸ்டாக”, அந்த மூன்று குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக சுகப்பிரசவம் பார்த்த பெண் மருத்துவரும் இதே ஜூன் 10-ஆம் தேதியில் பிறந்தவர் என்பதுதான்! ஒரே தேதியில் மூன்று உடன்பிறப்புகள் பிறந்த அதிசயத்தோடு, அவர்களுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பிறந்தநாளும் அதே தேதியில் அமைந்த இந்த அரிய தற்செயல் நிகழ்வையும் சேர்த்து உலக சாதனை நிறுவனங்கள் தங்களது சாதன புத்தகத்தில் பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…