ஒரே ஒரு புகார்… 20 இடங்களில் ரெய்டு… மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சம்மன்… திமுக வட்டாரத்தில் திடீர் பதற்றம் ஏன்…!

Spread the love

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மற்றும் சில மாவட்டங்களில், நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணிகள் ஏதும் செய்யாமலேயே பொதுப் பணத்தைக் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக எ.வ. வேலு இருந்தபோது, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு, எந்தவொரு வேலையையும் செய்யாமலேயே தனியார் நிறுவனத்திற்கு 3.23 கோடி ரூபாய் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டுச் சதி மூலம் அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். எ.வ. வேலுவின் இல்லங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் எனப் பரவலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 40 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்தது. எனினும், தனது இடங்களில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று எ.வ. வேலு உடனடியாக மறுப்புத் தெரிவித்தார்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணையின் போது முக்கியத் தகவல்கள் வெளிவரலாம் என்றும், சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.

SATHISH R

Recent Posts

ஷாக் நியூஸ்… முடிவுக்கு வந்த 100 நாள் வேலைத் திட்டம்… இனிமேல் கிராமப்புற மக்களுக்கு வேலை கிடையாதா?… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…

4 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி…. கொத்து கொத்தாக தவெகவில் இணையும் அதிமுக தலைகள்… தமிழக அரசியலில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…

14 minutes ago

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… நகை பிரியர்களுக்கு அடிச்சது லக்…!

மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…

18 minutes ago

“அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா?”… என்ன CM சார் இப்படி பண்றீங்களே?… விஜய் அடுத்த அந்த ஒரு முடிவால் அலறும் தமிழகம்…!

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…

29 minutes ago

அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…

37 minutes ago

விஜய்யின் ‘சிங்க’ கர்ஜனை! அலறிய திருமா, வைகோ… தவெக கூட்டணியில் வெடித்த ‘திடீர்’ பூகம்பம்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு பஞ்சாயத்து…!

தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…

47 minutes ago