மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து படுத்துக்கொண்டது. சஃபாரி வாகனங்கள் தனக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த போதிலும், அதைப் பற்றி எந்தப் பயமும் இல்லாமல் அந்தச் சிறுத்தை சாலையின் நடுவிலேயே மிகவும் நிதானமாகப் படுத்துக் கொண்டு, உடலை நீட்டி நெளித்து ஓய்வெடுத்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சிறுத்தை சாலையை விட்டு நகரமால் அங்கேயே புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மேலே செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டன. பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடி மறையும் சிறுத்தையின் இந்த கம்பீரமான மற்றும் அமைதியான “ராயல்” தோரணை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
https://twitter.com/i/status/2071842897939587178
இந்த அரிய காட்சியைச் சஃபாரி வாகனங்களில் இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது கேமராக்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். காட்டின் அழகை இவ்வளவு அருகில் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தற்போது இந்த சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…