அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளது. இருப்பினும், பாமக தலைவர் அன்புமணியை அதிமுக நிர்வாகிகள் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இதற்கிடையே, மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்விலும் பாமக தரப்பில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்தபோதிலும், அதிமுகவிற்குப் பாமக தொடர்ந்து ஆதரவு தெரிவிக்காமல் தள்ளி நிற்பது கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை விரைவில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…
மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…