அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளது. இருப்பினும், பாமக தலைவர் அன்புமணியை அதிமுக நிர்வாகிகள் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இதற்கிடையே, மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்விலும் பாமக தரப்பில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்தபோதிலும், அதிமுகவிற்குப் பாமக தொடர்ந்து ஆதரவு தெரிவிக்காமல் தள்ளி நிற்பது கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை விரைவில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
