மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின் பெயரை கட்சித் தலைமை தவிர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் முக்கியப் பொறுப்பில் அவர் இருந்தபோதிலும், மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியூர் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் எழுந்த பவுடர் விவகாரம் மற்றும் அவரது நிர்வாகச் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், முதலமைச்சர் விஜய் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து அவரை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, தேர்தல் களத்தில் இருந்து தலைமை அவரைத் தவிர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
