அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தான்யா சங்கானி என்ற பெண்மணி, தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். குஜராத்தில் உள்ள மதுபன் ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் (Madhuban Resort and Spa) தங்கியிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான்யா குஜராத்தில் தங்கியிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அந்நிய நாட்டில் தனியாக இருந்த அவருக்கு அந்தச் சூழல் சவாலாக இருந்தது.
வழக்கமான ஹோட்டல் சேவைகளைத் தாண்டி, அங்கிருந்த ஊழியர்கள் தான்யாவைத் தங்கள் குடும்ப உறுப்பினர் போலக் கவனித்துக் கொண்டனர். அவருக்குத் தேவையான மருந்துகளை உடனுக்குடன் ஏற்பாடு செய்ததோடு, அவரது உடல்நிலை குறித்துத் தொடர்ந்து அக்கறையுடன் விசாரித்து வந்துள்ளனர். ஹோட்டல் ஊழியர்களின் இந்தத் தனிப்பட்ட கவனிப்பும், அன்பும் தான்யாவை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. “இந்தியா என்பது இணையத்தில் காட்டப்படுவது போல வெறும் எதிர்மறையான விஷயங்கள் கொண்ட நாடு அல்ல; இது அன்பும் அக்கறையும் நிறைந்த பூமி” என்பதை இந்தச் சம்பவம் தனக்கு உணர்த்தியதாக அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் பண்பை உலகிற்குப் பறைசாற்றும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…