Connect with us

CINEMA

என்னது.., வெற்றிமாறன் கதைக்கு தல ஓகே சொல்லிட்டாரா..? ஒரே அடியா ஷாக் குடுத்தா எப்படி பா..? வெளியான மாஸ் அப்டேட்..

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை போல மாஸ் டைரக்டர்களும் இருக்கின்றனர். அவர்கள் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்குள் ஒரு போட்டியே மறைமுகமாக இருக்கும். ஏனெனில் வழக்கமான மசாலா கதைகளாக இல்லாமல், வித்யாசமான கதை களங்களில், மாறுபட்ட கோணங்களில் அவர்கள் இயக்கும் படங்கள் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறுகின்றன. எனவே, அதுபோன்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பது, நடிகர்களுக்கும் திருப்புமுனையாக அமையும்.

 Actor Ajith Kumar

   

அப்படிப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை என ஒவ்வொரு படமும், அவரது திரைக்களத்தை, அந்த கதை மாந்தர்களை மிக வலுவாக பேச வைப்பதாகவே இருக்கும். இப்போது விடுதலை 2 படப்பிடிப்பில் உள்ள வெற்றிமாறன், அந்த படத்தை முடித்துவிட்டு, அஜீத்குமாருடன் இணைய உள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது. எல்டர்குமார் தயாரிப்பில் அஜீத்குமார், வெற்றிமாறன் இயக்கும் புதுப்படத்தில் இணைகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

 Actor Ajith Kumar

வெற்றிமாறன் சொன்ன ஒருவரி கதையை கேட்டு மிகவும் பிடித்து போய்விட்டதால் உடனே ஓகே சொன்ன அஜீத்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு முன்பாகவே, அதாவது விடாமுயற்சிக்கு பிறகு இந்த படத்தை முடித்து விடலாம் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்தான் நடிப்பதாக முதலில் தகவல் பரவி வந்தது. இந்த சூழலில் திடீரென அஜீத்குமார் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top