Connect with us

CINEMA

விவாகரத்துக்கு பிறகு.. குழந்தைகள் விஷயத்தில் நடிகை சமந்தா எடுத்த அதிர்ச்சி முடிவு… ஷாக்கில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.

   

திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Actress Samantha

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா ‘பிரதியுஷா’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனம் மூலமாக சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருக்கிறார் என்ற செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top