Connect with us

CINEMA

‘என்னுடைய உலகத்திற்கு பிறந்தநாள்’… மகளின் பிறந்தநாளை செமயாக கொண்டாடிய நடிகை சுரேகா வாணி… வைரலாகும் வீடியோ…

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது, ஆனால் அவர் இதுவரை இதுதொடர்பாக  எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும்வெளியிடவில்லை.

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தனது 21 வது பிறந்தாளை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை சுரேகா வாணியின் மகளா இது? அடுத்த ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

Continue Reading

More in CINEMA

To Top