Connect with us

TRENDING

இனி திரைக்கு முன் இல்லை.. திரைக்கு பின் தான்.. புதிய அவதாரம் எடுத்த நடிகை நயன்தாரா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்து வருகிறார்.

   

தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ‘தி ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும்  இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி நடிகை நயன்தாரா லிப் பாம், நாப்கின் போன்ற பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். 9skin  என்ற பெயரில் சில productகளையும் லான்ச் செய்தார் . இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் அவர்களுக்கு போட்டியாக இயக்குனராகவும் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில் அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘TRUST the MAGIC of New beginnings’  என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘விக்கி நீங்க போட்டி போட தயாரா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Continue Reading

More in TRENDING

To Top