தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி மற்றும் பிரபுதேவா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கவிதா என்ற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று அவர் மாற்றிக் கொண்டார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தின் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான பிரச்சனையில் விஜயகாந்த் தனக்கு உதவியது தொடர்பாக கௌசல்யா பேசியுள்ளார்.
அதில், அவர் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் நான் அவருடன் இணைந்து நடிக்கும் போது எங்களை எல்லாம் அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார். ஒருமுறை நான் இரவு காரில் வந்து கொண்டிருக்கும்போது நல்ல மழை பெய்ததால் ரோட்டில் என்னுடைய கார் பஞ்சர் ஆகி நின்று விட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த விஜயகாந்த் அவரே காரில் இருந்த ஸ்டெப்னி டயரை எடுத்து பஞ்சரான டயரை மாற்றி என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது போன்ற குணம் யாருக்கும் வராது. விஜயகாந்த் எப்போதுமே யாராலும் குறை சொல்ல முடியாத நபர் என்று கௌசல்யா பேசியுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…