#image_title
தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.
நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 500 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படியாவது தன்னுடைய காமெடிக் காட்சிகளில் எதாவது இரட்டை அர்த்தம் வருவது போல வசனங்களோ அல்லது உடல் மொழியையோ வெளிப்படுத்தி விடுவார். ஆனாலும் அவற்றில் பல பெரியவர்கள் ரசித்து பார்க்கும்படி இருக்கும்.
ஈகோ பார்க்காமல் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் முழு மகிழ்ச்சியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகராக இருந்த போதும் ஜோதிடத்தில் அபார அறிவுள்ளராக அறியப்பட்டுள்ளார். அதனால் அவரின் சக நடிகர்கள் அவரிடம் தங்கள் ஜாதகத்தைக் கொடுத்து கணிக்க சொல்வார்களாம். அப்படிதான் ஒருமுறை சிவாஜி கணேசன் அவரிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்துள்ளார்.
அவரின் ஜாதகத்தைக் கணித்த மூர்த்தி, “உங்களுக்கு அரசு சம்பந்தமான பதவி கிடைக்கும்” என்று கூறியுள்ளார். ஆனால் அதை சிவாஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் அவர் கூறியது போலவே “சிவாஜிக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி” கொடுக்கப்பட்டுள்ளது.
இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜி, மூர்த்தியை சந்தித்த போது, “நீ சொன்னது மாதிரியே நடந்திருச்சு.. எல்லாரும் வீட்டுல வந்து பார்த்தாங்க நீ ஏன் வரல” எனக் கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி தனக்கே உண்டான ஸ்டைலில் “உங்களுக்கு பதவி வரும்னு ஜோசியம் கணிச்சு சொன்னது நான். நியாயமா பார்த்தா நீங்கதான் என் வீட்டுல வந்து என்னைப் பார்த்திருக்கணும்” என சொன்னாராம். அவரின் இந்த கமெண்ட்டை சிவாஜி வெகுவாக ரசித்தாராம்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…