சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் காலா படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ஒருநாள் ரஜினி நடித்த படங்களில் யாருக்கு எந்த படம் பிடிக்கும் ஒரு டிஸ்கஷன் எங்களுக்குள் நடந்தது. அப்போது ரஜினி சாரும் எங்களுடன் இருந்தார். பாட்ஷா பிடிக்குமா, அண்ணாமலை பிடிக்குமா என்ற கேள்வி வந்த போது அங்கு இருந்த எல்லாருமே பாட்ஷா படம் பிடிக்கும் என்றனர்.
நான் மட்டும் அண்ணாமலை படம் பிடிக்கும் என்றேன். ஏன் ஏன் அண்ணாமலை படம் பிடிக்கும் பாட்ஷா பிடிக்காதா என்று என்னிடம் ரஜினி சார் கேட்டார். இல்லே சார் பாட்ஷாவும் பிடிக்கும். ஆனால் அதை விட அண்ணாமலை கிரேட் என்றேன். எப்படி சொல்றீங்க என்று கேட்டார்.
அதற்கு நான், பாட்ஷா படத்தில் ரகுவரன் வில்லன். அவரை கொன்னுட்டா படம் முடிஞ்சுரும் என்று எனக்கு தெரியும். ஆனா அண்ணாமலை படத்துல வில்லன் அவரோட பிரண்ட். கடைசியில் மன்னிச்சு நல்லா வாழ்ந்தவன் கெடக் கூடாதும்மான்னு சொல்லி அம்மா கிட்ட நண்பன் வீட்டை அண்ணாமலை கொடுத்துடறான். அப்போ அண்ணாமலை உன்னத நிலைக்கு போயிடறான்.
அதனால் அண்ணாமலை படம் ஹீரோ வில்லன் என்ற நிலையை தாண்டி ஒரு பிலாஸபியான ஒரு படமாக இருந்தது சார் என்று சொன்னேன். அதை கேட்டதும் எஸ் எஸ் அண்ணாமலை ரொம்ப நல்ல படம் என்று ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார் என்று நடிகர் மணிகண்டன் அதில் கூறியிருக்கிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…