CINEMA
பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..
2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. சிம்பு தேவன் இயக்கிய இந்த படத்தில் மனோரமா, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தை எடுக்க சிம்பு தேவன் வடிவேலு கூட்டணி முடிவு செய்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு ஆர்த்தி, கோவை சரளா உள்ளிட்டோருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்த்தியும் கோவை சரளாவும் ஷூட்டிங்க்கு கொடுத்த நாட்களை படக்குழு தள்ளிப் போட்டது.
இதனிடையே தள்ளி போடப்பட்ட அதே நாளில் படப்பிடிப்பு நடந்ததாக ஆர்த்திக்கு தெரியவந்து. அவர் சிம்பு தேவனிடம் விசாரித்துள்ளார். அப்போது வடிவேலு தான் சரளா ஆர்த்தி முகத்தை எல்லாம் நிறைய முறை பார்த்து விட்டார்கள். அதனால் அந்த முகங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் அவருக்குத் தெரிந்த சிலரை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு 24ம் புலிகேசி படம் எத்தனை சிக்கல்களை சந்தித்தது என்பது பலருக்கும் தெரிந்ததே இந்த நிகழ்வை ஆர்த்தி தான் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அதோடு பத்து வருடத்திற்கு வடிவேலுவின் முகத்தை நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.