சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

By vinoth on மே 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.

   

சிவாஜி கணேசன் 6 வயது சிறுவனாக இருக்கும் போதே நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல வேடங்களில் நடித்தார். பதின் வயதை எட்டியதும் அவருக்குப் பெண் வேடங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் அவர் தன் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர்தான் அவருக்கு தன்னுடைய 24 ஆவது வயதில் பராசக்தி பட வாய்ப்பு வந்துள்ளது.

   

சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.  இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

இதையெல்லாம் சிவாஜி கணெசனின் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அவர் பிறந்த அன்று அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தேசிய வாதி என்பதால் அவர் கைது செய்யப்பட்டாராம். அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் நன்னடத்தைக் காரணமாக அவர் நான்கரை ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டாராம். அப்போதுதான் சிவாஜி தன் தந்தையை முதல் முறையாக பார்த்துள்ளார்.