“நள்ளிரவில் வாலிபரை ஓட ஓட வெட்டிக் கொடூரக் கொலை..!” ஜல்லிக்கட்டு காளையால் வந்த 6 ஆண்டுப் பகை… மதுரையில் நடுங்க வைக்கும் பழிவாங்கும் சம்பவம்…!

Spread the love

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் அம்சகொடி (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (26) என்பவருக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு மாடு வாங்கியதில் பணத் தகராறு ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டதால், பெற்றோர் அம்சகொடியை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லும் அம்சகொடி, சம்பவத்தன்று வெளியூரிலிருந்து வந்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, வலையபட்டி கிராம மந்தை அருகே போதையில் இருந்த கார்த்திக் ராஜா, அவரது நண்பர்களான நந்து (21) மற்றும் குருவி மணிகண்டன் ஆகியோர் அம்சகொடியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை எடுத்து அம்சகொடியின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பயங்கரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அம்சகொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெருங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ நடந்த 18 மணி நேரத்திற்குள், மண்டேலா நகர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக் ராஜா, நந்து, குருவி மணிகண்டன், விஜய் மற்றும் நாகேந்திரன் ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூரக் கொலை தற்செயலாக நடந்ததா அல்லது முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

40 minutes ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

46 minutes ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

53 minutes ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

1 மணத்தியாலம் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

1 மணத்தியாலம் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

1 மணத்தியாலம் ago