அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எஸ்பி. வேலுமணி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்கள் கே.பி. அன்பழகன் மற்றும் கே.சி. வீரமணி ஆகியோரும் தங்களது கட்சிப் பொறுப்புகளைத் துறப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தற்போதைய முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் இந்த நால்வரின் அடுத்தடுத்த ராஜினாமா, அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இவர்கள் அனைவரும் தங்களது எம்.எல்.ஏ (MLA) பதவிகளையும் ராஜினாமா செய்யப்போகிறார்களா என்ற புதிய அரசியல் விவாதத்தையும், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…