FLASH NEWS: அதிமுகவில் முக்கிய தலைவர்கள் ராஜினாமா… தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!

By Visaka on ஆடி 1, 2026

Spread the love

அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எஸ்பி. வேலுமணி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்கள் கே.பி. அன்பழகன் மற்றும் கே.சி. வீரமணி ஆகியோரும் தங்களது கட்சிப் பொறுப்புகளைத் துறப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தற்போதைய முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் இந்த நால்வரின் அடுத்தடுத்த ராஜினாமா, அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இவர்கள் அனைவரும் தங்களது எம்.எல்.ஏ (MLA) பதவிகளையும் ராஜினாமா செய்யப்போகிறார்களா என்ற புதிய அரசியல் விவாதத்தையும், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.