இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிட்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்க முடிவு செய்திருந்தன. ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரான் அதன் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களின் வழிகாட்டுதலின்படி, ஈரான் கடலோரப் பகுதி வழியாகத்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி ஈரான் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

ஈரானின் இந்த ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் மையங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட 10 முக்கிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீண்டும் மீறியதாலேயே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால் அமெரிக்கா பொறுமையாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே தொடங்கிய ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உலக வரைபடத்தில் “ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்” என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் எச்சரித்துள்ளார்.

Visaka

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

5 மணத்தியாலங்கள் ago