MP ஆக 40 கோடி, MLA ஆக 10 கோடி… தமிழக அரசியலின் கசப்பான உண்மையை கிழித்தெறிந்த திருச்சி எம்பி…!

Spread the love

தேர்தல் அரசியலில் பணத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாகப் பரவலான விமர்சனங்கள் உள்ள நிலையில், “ஐந்து பைசா செலவு செய்யாமல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது” என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பேசியுள்ளார். சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வென்ற மதிமுக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சனிக்கிழமை கூட்டணியை விட்டு விலகியது. இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்தைக் குறிப்பிட்டு அவர் ஆற்றிய உரை பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பொதுமக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய துரை வைகோ, வாக்காளர்கள் கட்சி, சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “நீங்கள் மதிமுகவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஊராட்சி மன்றத் தலைவர் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் வரை நல்லவர்கள் யார் என்று பார்த்து வாக்களியுங்கள். அப்போதுதான் தமிழகத்தில் உண்மையான மாற்றம் நிகழும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தான் குறிப்பிடும் ‘மாற்றம்’ என்பது தவெக கட்சியையோ அல்லது நடிகர் விஜய்யையோ ஆதரிப்பது போன்ற குறுகிய நோக்கம் கொண்டது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் கடந்த 20, 25 ஆண்டுகளாகப் பண பலம் இருந்தால் மட்டுமே தேர்தலில் வெல்ல முடியும் என்ற நிலை நீடித்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் கூடப் பணம் தேவைப்படும் சூழலில், சட்டமன்ற உறுப்பினராக 5 முதல் 10 கோடிகளும், நாடாளுமன்ற உறுப்பினராக 40 கோடிகளும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுவதை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலிலும், அஞ்சு பைசா செலவின்றி மக்கள் செல்வாக்கால் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம், மக்கள் பணி சரியாகச் செய்தாலே ஆதரவு கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறிய அவர், இந்த நேர்மறையான அரசியல் மாற்றம் தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

Visaka

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago