பெங்களூரில் நிலமங்கலா நகரில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ராதா என்ற 27 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாவுக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும் பிறந்ததிலிருந்து குழந்தை பால் குடிக்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தை சாதாரணமாக இல்லை என்று நம்பிய ராதா பிரசவத்திற்கு பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ராதாவின் கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார்.
விஸ்வேஸ்வர புராவில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் ராதா வசித்து வந்த நிலையில் அவரைப் பார்ப்பதையும் கணவர் நிறுத்திவிட்டார். இப்படியான நிலையில் நேற்று அடுப்பை பற்ற வைத்த ராதா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி பிறகு அவர் குழந்தையை பாத்திரத்தில் வைத்துள்ளார். இதனால் குழந்தை துடி துடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வர ராதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…