ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ராஜசேகர ரெட்டியின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அந்த முகாமை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, ஒய் எஸ் ஆர் பின்னால் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. ஒய் எஸ் ஆர் மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவரை நாங்கள் கடவுளாக மனதில் வைத்துள்ளோம். பவன் கல்யாண் படபிடிப்பில் பிஸியாக உள்ளார். அவர் ஆந்திராவில் சிறப்பு வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி . திடீரென்று பவன் கல்யாண் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன் என சொல்வதற்கு காரணம் என்ன? பழனி முருகனுக்கு திடீரென பவன் கல்யாண் பக்தராக மாறிவிட்டாரா? அவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது. மக்கள் தகுதியானவர்களை முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பவன் கல்யாண் டைம்பாஸ் செய்து வருகின்றார். சீரியஸ் அரசியல்வாதி அவர் கிடையாது. இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம்பாஸ் அரசியல் செய்து வருகிறார்கள். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முழு நேர அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் mgr, ஜெயலலிதா போல செயல்பட வேண்டும். மக்கள் உங்களை நம்பும்போது மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சண்டை போட வேண்டும். பாதியிலேயே விட்டு செல்லக்கூடாது என்று ரோஜா விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…
தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.…
தங்கம் விலை வீழ்ச்சியடைந்து விடுமோ என்ற பீதியில் இந்திய குடும்பங்கள் சுமார் 50 டன் தங்கத்தை விற்றுப் பணமாக்கியதாக செய்திகள்…
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு 'நீயா நானா' நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்…
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…