ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ராஜசேகர ரெட்டியின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அந்த முகாமை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, ஒய் எஸ் ஆர் பின்னால் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. ஒய் எஸ் ஆர் மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவரை நாங்கள் கடவுளாக மனதில் வைத்துள்ளோம். பவன் கல்யாண் படபிடிப்பில் பிஸியாக உள்ளார். அவர் ஆந்திராவில் சிறப்பு வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி . திடீரென்று பவன் கல்யாண் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன் என சொல்வதற்கு காரணம் என்ன? பழனி முருகனுக்கு திடீரென பவன் கல்யாண் பக்தராக மாறிவிட்டாரா? அவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது. மக்கள் தகுதியானவர்களை முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பவன் கல்யாண் டைம்பாஸ் செய்து வருகின்றார். சீரியஸ் அரசியல்வாதி அவர் கிடையாது. இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம்பாஸ் அரசியல் செய்து வருகிறார்கள். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முழு நேர அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் mgr, ஜெயலலிதா போல செயல்பட வேண்டும். மக்கள் உங்களை நம்பும்போது மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சண்டை போட வேண்டும். பாதியிலேயே விட்டு செல்லக்கூடாது என்று ரோஜா விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
