“சந்தேகப் பேய் பிடித்த கணவன்… குழந்தைகள் கண் எதிரே எலக்ட்ரீசியன் செய்த பயங்கர சம்பவம்.. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி.. கேரளாவை உலுக்கிய கொடூரக் கொலை”..!!!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்ற எலக்ட்ரீசியனும், அவரது மனைவி ஹசீனா பீவியும் (36) தங்களது 4 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களாக நாலாஞ்சிராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஹசீனா பீவியின் நடத்தை மீது சுரேஷ்குமாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹசீனா பீவி மண்ணந்தலை காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசில் புகார் செய்ததால் ஹசீனா பீவி மீது சுரேஷ்குமாருக்கு கோபம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த குழந்தைகளும் கண் விழித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சுரேஷ்குமார், திடீரென கத்தியை எடுத்து ஹசீனா பீவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

கணவரின் இந்தத் திடீர் கொடூர தாக்குதலால் ஹசீனா பீவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்களது கண் எதிரே தாய் படுகொலை செய்யப்பட்ட பயங்கரக் காட்சியைக் கண்ட 4 குழந்தைகளும் கதறி அழுதனர். இக்கொலை சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மண்ணந்தலை போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய சுரேஷ்குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அதிர்ச்சி..! கிடுகிடுவென சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

கடந்த இரண்டு நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக விற்பனையாகி வந்த தங்கம் விலையானது இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில்…

3 minutes ago

அதிர்ச்சி..! டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறதா அரசு..? தலைமைச் செயலக ரகசிய திட்டத்தால் 25,000 ஊழியர்கள் பரிதவிப்பு..!!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக்…

8 minutes ago

மின்வாரிய தலைமையகத்தில் நள்ளிரவு சதி..? 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்.. சிசிடிவி-யை அலசும் போலீஸ்…!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய…

13 minutes ago

“என் கஷ்டமெல்லாம் தீர்ந்துரும்” நிலத்தை வித்து மகளை டாக்டருக்கு படிக்க வச்ச தந்தை… 25 வயதில் விளையாடிய விதி… கண்ணீர் விட்டு கதறும் தந்தை..!!

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காகத் தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோருக்கு, விதி சில நேரங்களில் மீளாத் துயரத்தையே…

15 minutes ago

ஒருபுறம் கொடூர தாக்குதல்… மறுபுறம் அமெரிக்காவுடன் ரகசிய பேச்சுவார்த்தை.. ஈரானில் நடப்பது என்ன..?

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் மற்றும் ராணுவ மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம்…

23 minutes ago

“தேர்தல் முடிஞ்சி 1 மாசம் ஆச்சி… இன்னும் வந்து எட்டி கூட பாக்கல..” சொன்ன வாக்குறுதியை காப்பாத்தலையே.. CM விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தேர்தல் பரப்புரையின் போது, வெற்றி பெற்றால் தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் என்று தமிழக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.…

29 minutes ago