தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சரிசெய்யவும், டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கூடுதல் விலை வசூல் முறைகேடு போன்ற நிர்வாகச் சிக்கல்களைக் கட்டுப்படுத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தனியார்மயமாக்க தலைமைச் செயலக வட்டாரத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த புதிய திட்டத்தின்படி, மதுபான மொத்த கொள்முதலை மட்டும் அரசே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பா்களை ஏல முறையில் தனியாருக்கு வழங்கும் பிபிபி மாடலைச் செயல்படுத்த அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய உரிம முறை அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில், தனியார்மயமாக்கல் முறையினால் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் 25,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளனர்.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…