“லஞ்சம் வாங்கினா காலி” CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்… சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்..!!

Spread the love

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்களை அடுத்து, அங்குள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள மத்திய நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய கண்காணிப்புப் பொறியாளர் முதல் உதவிப் பொறியாளர் வரை அனைத்து அதிகாரிகளும் பிற துறைகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 1,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு தலைமையக நகரமைப்புப் பிரிவில்தான் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னரும் பொதுமக்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டு லஞ்சப் புகார்கள் குவிந்தன. சில அதிகாரிகள் அரசியல் பின்னணியுடன் ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது அரசு மாறியுள்ள சூழலில் அவர்களின் நீண்டகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்த அதிரடி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த இடமாற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாகும். இனிமேல் விதிகளுக்கு உட்பட்டு, இரண்டு நாட்களுக்குள் கட்டிட அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் சீல் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிற துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதால், அடுத்தடுத்து பல அதிரடி இடமாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

நள்ளிரவில் வெடித்த சண்டை.. சமையலறைக்குள் ஓடிய மனைவி.. அடுத்த நொடி கணவனுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான சுகராஜ், அங்குள்ள ஒரு தனியார் நூற்பாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து…

8 minutes ago

“என் சாமி நீங்கதான்!”.. வீட்டுப் பூஜை அறையில் ஜோசப் விஜய் சிலை.. தொண்டர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்ற நாளில் இருந்து, அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் பெரும்…

14 minutes ago

3 நாட்களாக போன் எடுக்காத ஆசிரியர்…. வீட்டின் உள்ளே வீசிய துர்நாற்றம்.. உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தமிழகத்தில் பரபரப்பு….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் கிராமத்தில், நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவன் (50) என்பவர்…

16 minutes ago

அன்னை இல்லம் படிக்கட்டில் நடந்த ‘அந்த’ சம்பவம்… சிவாஜியின் இடது கையில் இப்படி ஒரு மேஜிக் இருக்கா?.. இத்தனை வருடங்களாக யாரும் கவனிக்காத ரகசியம்..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு இலக்கணம் மற்றும் அவரது பிரம்மாண்டமான 'அன்னை இல்லம்' குறித்த பல அரிய, வியப்பூட்டும்…

20 minutes ago

“3 மாசத்துல லஞ்சம் ஒழியும்”…. விஜய் சொன்ன சில நாட்களிலேயே நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்… ரசாயனப் பணத்தோடு சிக்கிய பெண் அதிகாரி….!

தமிழக அரசு அலுவலகங்களில் இன்னும் மூன்று மாதங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரமாக…

25 minutes ago