தந்தை, தாத்தா, சகோதரர்கள் என வரிசை கட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி… பெற்ற தாயே செய்த துரோகம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு வயதிலிருந்தே தனது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரால் அந்தச் சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தந்தை, தாத்தா மற்றும் இரண்டு சகோதரர்கள் என அந்தப் பிஞ்சு குழந்தைக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டியவர்களே வேட்டையாடிய மிருகங்களாக மாறியுள்ளனர். அந்தப் பெண் குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமியின் தாய் இந்த கொடுமைகள் அனைத்தையும் அறிந்திருந்தும், அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது மட்டுமின்றி, குழந்தையைத் தண்டிக்கும் கொடூரத்திலும் ஈடுபட்டுள்ளார். தான் அனுபவிக்கும் சித்திரவதைகளைத் தாயிடம் கூறியபோது, அச்சிறுமி ஒரு அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டு, வாய் டேப்பால் ஒட்டப்பட்டு, இரண்டு நாட்கள் வரை பட்டினி போடப்பட்டுள்ளார். மேலும், சிகரெட் சூடு வைக்கப்பட்டும், குதிரைச் சாட்டையால் அடிக்கப்பட்டும் அந்தச் சிறுமி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டிருப்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது.

சிறுமிக்கு 12 வயதான நிலையில், வீட்டிற்குச் செல்லப் பயந்து தனது பள்ளி ஆசிரியரிடம் இந்தத் துன்புறுத்தல்களைத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார். ஆசிரியரின் உதவியுடன் காவல்துறைக்குத் தகவல் சென்றதை அடுத்து, அந்தச் சிறுமி தனது வாக்குமூலத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் விவரித்துள்ளார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 43 வயதான தந்தை, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், சகோதரர்கள் மற்றும் தாத்தா ஆகியோர் பல்வேறு பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றங்களுக்குத் துணையாக இருந்த தாய்க்குச் சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் நீதியைத் திசை திருப்பிய குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு எதிராக நடந்த இந்த மிருகத்தனமானச் செயல்களுக்கு உரிய நீதி கிடைத்துள்ள போதிலும், அச்சிறுமி கடந்து வந்த வலியும் வேதனையும் சமூகத்தில் நிலவும் பாதுகாப்பு குறித்தக் கேள்விகளை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“மேடம் அவரு நடிக்கிறாரு மேடம்!… 5 வருடத்தில் காணாமல் போய்விடுவார்”.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த பாஜக செய்தி தொடர்பாளர்… எகிறும் அரசியல் அனல்…!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக கூட்டணிக் கட்சிகளின்…

13 minutes ago

ரஜினி பட ஷூட்டிங்கில் நேர்ந்த விபரீதம்.. 28 வயது இளைஞர் துடிதுடிக்க பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே…

22 minutes ago

“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு…

38 minutes ago

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

47 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

50 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

52 minutes ago