சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அப்போது, படப்பிடிப்பிற்காக பிரத்யேகமாக வீடு போன்ற கலை அலங்கார செட் (Art Work) அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது இளைஞரான கார்த்திகேயன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சித் தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு தளம் சோகத்தில் ஆழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…