“மேடம் அவரு நடிக்கிறாரு மேடம்!… 5 வருடத்தில் காணாமல் போய்விடுவார்”.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த பாஜக செய்தி தொடர்பாளர்… எகிறும் அரசியல் அனல்…!!

Spread the love

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று, சட்டசபையில் தனது பெரும்பான்மையையும் நிரூபித்துள்ள நிலையில், புதுவை மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அருள் முருகன் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் வெற்றி என்பது ஒரு ‘மைனாரிட்டி’ அரசாங்கம் என்றும், இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.

விஜய் தேர்தல் சமயத்தில் கோயிலுக்குச் சென்றதும், கையில் வேல் ஏந்தி முருகனை வழிபட்டதும் வெறும் நாடகம் என்று அருள் முருகன் விமர்சித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர் பெரியார் திடலுக்குச் சென்று கி. வீரமணியைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், விஜய் ஒரு “இந்து விரோதி” என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே நெற்றியில் பொட்டு வைப்பது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டார் என்றும் காரசாரமாகக் குற்றம் சாட்டினார். சனாதனம் குறித்துப் பேசுபவர்கள் விரைவில் அரசியல் முகவரியை இழப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், விஜய்யின் இந்த வெற்றியானது மக்கள் விரும்பி அளித்த வெற்றி அல்ல என்றும், நடிகர்கள் மீதான மோகத்தால் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியிடம் கெஞ்சிப் பெற்றுத் தந்த வாக்குகள் என்றும் அவர் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சிரஞ்சீவி ஆகியோரது அரசியல் பயணத்தைப் போலவே, விஜய்யின் அரசியலும் காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்றும், இன்ஸ்டாகிராம் புகழால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது என்றும் தனது பேட்டியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய “திருக்குவளை பார்முலா”வைத்தான் விஜய்யும் பின்பற்றுவதாகத் தாக்கிய அருள் முருகன், பிரபலமான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து மட்டுமே விஜய் பிரபலமானார் என்று தனிப்பட்ட ரீதியிலும் விமர்சித்துள்ளார். திமுக மற்றும் அதிமுகவை உடைத்துத் தவெக ஆட்சி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் விஜய்யின் ஆட்சி பற்றி மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிடும் என்றும், அதன்பின் அவர் அரசியலில் இருந்து மறைந்துவிடுவார் என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

17 minutes ago

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க” இறப்பதற்கு முன் உறவினர்களை அழைத்து அதிர்ச்சி கொடுத்த முதியவர்… சமூக வலைதளங்களில் வைரலாகும் கண்ணீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…

22 minutes ago

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

29 minutes ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

33 minutes ago

மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

35 minutes ago

இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

41 minutes ago