“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு மகனுடன் தவறான உறவில் இருந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம், தனது இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்த பிறகு, செவிலியரான அலெக்சிஸ் தனது வளர்ப்பு மகனுடன் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டும், திரைப்படம் பார்த்துக் கொண்டும் இருந்துள்ளார். அப்போது, தான் தனது கணவருடன் நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளவில்லை என்று சிறுவனிடம் கூறி, அவருடன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

வேலை முடிந்து அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய அலெக்சிஸின் கணவர் பிராங்க், தனது மனைவியும் மகனும் சோஃபாவில் தகாத நிலையில் இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நிலைகுலைந்து போன அவர் சத்தமிட்டதோடு, உடனடியாகத் தனது மகனை அங்கிருந்து அழைத்துச் சென்று அவனது தாத்தா பாட்டி வீட்டில் விட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே, தனது கணவர் இதைக் கண்டுபிடித்திருக்கக் கூடாது என அலெக்சிஸ் அந்தச் சிறுவனிடம் தொலைபேசியில் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தை உடனடியாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கத் தயங்கிய நிலையில், குடும்ப உறுப்பினர் ஒருவரே இது குறித்துப் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அலெக்சிஸ் கைது செய்யப்பட்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன. விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்காமல் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 10 ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொடூரச் செயலால், கடந்த மாதம் புளோரிடா சுகாதாரத் துறை அலெக்சிஸின் செவிலியர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டது. சமூகத்தின் பொறுப்பான நிலையில் இருந்த ஒரு செவிலியர் இத்தகைய செயலில் ஈடுபட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில், இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அலெக்சிஸின் கணவர் பிராங்க், தற்போது அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தொழில், குடும்பம் என அனைத்தையும் இழந்து அலெக்சிஸ் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Muthu Mani

Recent Posts

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

10 minutes ago

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க” இறப்பதற்கு முன் உறவினர்களை அழைத்து அதிர்ச்சி கொடுத்த முதியவர்… சமூக வலைதளங்களில் வைரலாகும் கண்ணீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…

14 minutes ago

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

22 minutes ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

25 minutes ago

மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

27 minutes ago

இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

33 minutes ago