“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு மகனுடன் தவறான உறவில் இருந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம், தனது இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்த பிறகு, செவிலியரான அலெக்சிஸ் தனது வளர்ப்பு மகனுடன் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டும், திரைப்படம் பார்த்துக் கொண்டும் இருந்துள்ளார். அப்போது, தான் தனது கணவருடன் நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளவில்லை என்று சிறுவனிடம் கூறி, அவருடன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

வேலை முடிந்து அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய அலெக்சிஸின் கணவர் பிராங்க், தனது மனைவியும் மகனும் சோஃபாவில் தகாத நிலையில் இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நிலைகுலைந்து போன அவர் சத்தமிட்டதோடு, உடனடியாகத் தனது மகனை அங்கிருந்து அழைத்துச் சென்று அவனது தாத்தா பாட்டி வீட்டில் விட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே, தனது கணவர் இதைக் கண்டுபிடித்திருக்கக் கூடாது என அலெக்சிஸ் அந்தச் சிறுவனிடம் தொலைபேசியில் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தை உடனடியாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கத் தயங்கிய நிலையில், குடும்ப உறுப்பினர் ஒருவரே இது குறித்துப் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அலெக்சிஸ் கைது செய்யப்பட்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன. விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்காமல் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 10 ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   

இந்தக் கொடூரச் செயலால், கடந்த மாதம் புளோரிடா சுகாதாரத் துறை அலெக்சிஸின் செவிலியர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டது. சமூகத்தின் பொறுப்பான நிலையில் இருந்த ஒரு செவிலியர் இத்தகைய செயலில் ஈடுபட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில், இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அலெக்சிஸின் கணவர் பிராங்க், தற்போது அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தொழில், குடும்பம் என அனைத்தையும் இழந்து அலெக்சிஸ் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.