நாகப்பட்டினத்தில் இரட்டைக்கொலை பயங்கரம்… ஊரே திரண்டு நின்ற காட்சிகள்… வெவ்வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்….!!

Spread the love

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நாகை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரயில்வே குட்செட் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த இரட்டை மரணங்கள் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், ரயில் நிலைய பகுதியில் கொலை செய்யப்பட்டவர் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் (40) என்பது தெரியவந்தது. கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த இவர், தாயாரின் மறைவுக்காக ஊருக்கு வந்திருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண், கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் மற்றும் டி.எஸ்.பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் வெளிப்பாளையம் மற்றும் நாகை நகர போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இந்த மரணங்கள் நாகை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

6 minutes ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

9 minutes ago

மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

11 minutes ago

இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

17 minutes ago

இனி கரண்ட் கட் இருக்காது..!பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உத்தரவு..!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுடன்…

20 minutes ago

“கோயம்பேடு 66 ஏக்கர் நிலம் யாருக்கு?… அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறதா?… அன்புமணி ராமதாஸ் அதிரடி அட்டாக்… கிளம்பாக்கத்தை அடுத்து கிளம்பிய புதிய சர்ச்சை”…!!

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அங்குள்ள 36 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட…

25 minutes ago