” கதவும் உடையல.. பீரோவும் உடையல.. ஆனா 21 சவரன் நகை அவுட்.. ராணிப்பேட்டையில் நடந்த விசித்திர கொள்ளை”..!!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனி (52). இவரது மனைவி பராசக்தி (45) மற்றும் மகன் கோபி கிருஷ்ணன் (26). குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். நேற்று இரவு பழனியும், பராசக்தியும் வீட்டின் நுழைவாயில் வராண்டாவிலும், மகன் கோபி கிருஷ்ணன் மாடி அறையிலும் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை குடும்பச் செலவிற்காகப் பணம் எடுக்க பராசக்தி பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படாத நிலையிலேயே, அதிலிருந்த 21 சவரன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் ஆகியவை மர்மமான முறையில் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வினோத கொள்ளைச் சம்பவம் குறித்து பராசக்தி அவளூர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவுகள் மற்றும் பீரோ சேதமடையாமல் பத்திரமாக இருக்கும் சூழலில், உள்ளே இருந்த பொருட்கள் மட்டும் எப்படிக் காணாமல் போயின என்பது குறித்து தீவிரக் குழப்பமடைந்தனர். இதையடுத்து, தடய அறிவியல் துறை கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் கைரேகைகள் மற்றும் முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்தவர்களே இந்த கைதேர்ந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தின் 7-வது ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள பிரியா, வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி காட்டினார். ஆய்வின் போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டைச் சோதித்த அவர், பணிக்கு வராதவர்கள் மற்றும் விடுப்பில் சென்றவர்கள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன், மருந்தகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர், நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார். “மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Muthu Mani

Recent Posts

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

12 seconds ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 minutes ago

விபத்தா..? அப்படின்னா என்ன..? – மரண பயத்தை காட்டிய.. காரை அசால்ட்டாக நிறுத்திய மாஸ் சிறுவன்…! பாராட்டும் நெட்டிசென்கள்…!

மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…

10 minutes ago

“அசத்திட்டீங்க…!” சி. விஜயபாஸ்கருக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பாராட்டு… மீட்டிங்கின் ‘லீக்’ ஆன ரகசியங்கள்…!!

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு…

10 minutes ago

கல்யாணத்துக்கு முன்னாடி 100 வாட்டி யோசிப்பேன்… திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த திரிஷா… பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது 43 வயதிலும் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகிறார். இவருக்கு எப்போது திருமணம்…

18 minutes ago