Connect with us

CINEMA

‘லியோ’ படத்தின் முக்கியமான காட்சியை உளறிய மன்சூர் அலிகான்… வைரலாகும் செய்தி…

தமிழ் சினிமாவில் பல குணசித்ரா வேடங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஜவ்வாது பட்டி புதூரை பூர்வீகமாகக் கொண்டவர்.இவர் 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இப்படமானது இவரின்  திரைப்பட வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

   

அதை தொடர்ந்து  சிங்கம்2,  ஜாக்பாட்,  சிலுக்குவார் பட்டி சிங்கம்,  சரவணன் இருக்க பயமேன்,  நானும் ரவுடிதான்,  புலன்விசாரணை 2 , மிரட்டல்,  கந்தசாமி போன்ற பல தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பகாசுரன், பிச்சைக்காரன் 2, சிம்மம் போன்ற படங்கள் வெளியாகி உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,  தெலுங்கு,  மலையாளம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சூட்டிங் முடிவடைந்த நிலையில் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது லியோ படத்தில் முக்கிய காட்சி ஒன்றை கூறிவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட்டு படத்தில் இறந்துவிட வேண்டும் என அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியை முதல் நாள் படித்தேன். அதன்பின் மறுநாள் பார்த்தால் அனுராக் கேரவனில் உட்கார்ந்து இருந்தார்.’அவர் என்ன நடித்தார் என தெரியவில்லை, வந்தாரு – சுட்டாரு போய்ட்டாரு’ என மன்சூர் அலி கான் கூறினார். அதன் பிறகு தான் லியோ சீக்ரெட்டை உளறுகிறோம் என உணர்ந்து ‘அய்யய்யோ.. லியோ பத்தி இனி என்னிடம் கேட்காதீங்க’ என கூறிவிடுகிறார். தற்போது இந்த செய்தி ஆனது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top