Connect with us

Tamizhanmedia.net

வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு…. செட்டிலான தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா.. இதோ முழு விவரம்..

TRENDING

வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு…. செட்டிலான தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா.. இதோ முழு விவரம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். அதேசமயம் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரும் தற்போது திருமணம் மற்றும் குழந்தை என செட்டிலாகி சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டனர். அப்படி திருமணம் செய்து கொண்ட ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் நடிகர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் பெரும்பாலான நடிகைகள் வெளிநாட்டுக்காரர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி வெளிநாட்டவரை திருமணம் செய்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து இதில் பார்ப்போம்.

   

நடிகை பிரியங்கா சோப்ரா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்து அங்கே சென்று அவர் தன்னை விட 10 வயது குறைந்த பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை ஸ்ரேயா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது ரஷ்ய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ள நிலையில் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை மாதவி:

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஆந்திராவை சேர்ந்த நாயகி மாதவி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ராதிகா ஆப்தே:

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நடிகையான ராதிகா ஆப்தே தற்போது உலகமே கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் பட சர்ச்சைகளில் சிக்கினார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தற்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ரிச்சா கங்கோபதியா:

இந்தியாவில் பிறந்த இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். அதன்பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு இந்தியா திரும்பிய இவர் தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த இவர் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று ஜோ லேஞ்சலா என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை இலியானா:

தமிழ் சினிமாவில் கேடி மற்றும் நண்பனாகிய இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இலியானா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியா ஃபோட்டோகிராபரான ஆண்ட்ரூ என்பவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். சமீபத்தில் கூட இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்தார்.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in TRENDING

To Top