Connect with us

CINEMA

“தலைவர் முதல் தல வரை”.. காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

இந்தியாவின் ஜனநாயக தேர்தலாக பார்க்கப்படும் மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவானது இன்று தமிழகத்தில் காலை தொடங்கியது. காலை 7:00 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

   

வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறும் என்றும், முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி என்று மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இன்று காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகிறார்கள்.

இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் 6:40 மணிக்கு திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தி சென்றார்.

அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்.

நடிகர் ராதிகா மற்றும் சரத்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்கள். நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் உள்ள செயின் சேவியர் பள்ளியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

 

பல பிரபலங்கள் தொடர்ந்து வாக்குகள் செலுத்தி வரும் நிலையில் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top